🏺 கலையரசன் ரா · அலகு 1

வடஇந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்

Term 2 · அலகு 1 · 148 வினா & விடை

Term 2
148 Q&A
Samacheer Kalvi

இந்த அலகு பற்றி

6ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வரலாறு (Term 2) பாடப்புத்தகத்தின் "வடஇந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடும்" அலகின் அடிப்படையில் கலையரசன் ரா தயாரித்த 148 வினா-விடைகள். TNPSC குரூப் 4 தேர்வுக்கு உதவும் வகையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

கலையரசன் ரா

🎓 தமிழ மாணவன் தமிழுக்கான மாணவன் 🙏

Q

வினா & விடைகள்

1

இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் எதனோடு முடிவுக்கு வந்தது?

✅ விடை
சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவோடு
2

இந்தியாவில் யாருடைய வருகையால் வேதகாலம் எனும் கால கட்டம் தொடங்கியது?

✅ விடை
ஆரியர்கள் வருகையால்
3

வேதகாலம் என்பது எந்த காலக்கட்டத்திற்கு இடைப்பட்டது?

✅ விடை
கி.மு. 1500 - 600
4

வேதகாலம் என்ற பெயர் எதிலிருந்து பெறப்பட்டது?

✅ விடை
வேதங்கள் என்பதில் இருந்து பெறப்பட்டது
5

ஆரியர்கள் என்பவர்கள் யார்?

✅ விடை
ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும், இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
6

ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?

✅ விடை
மத்திய ஆசியாவில் இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தவர்கள்.
7

ஆரியர்களின் முக்கியத் தொழில் என்ன?

✅ விடை
கால்நடை மேய்த்தல், மேலும் அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும் பின்பற்றினர்.
8

அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண்மை முறை என்றால் என்ன?

✅ விடை
இம்முறையில் நிலத்தின் மீது உள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும். அந்நிலத்தில் குறுகிய கால கட்டத்திற்கு வேளாண்மை செய்து அதன்பின் அந்நிலம் கைவிடப்படும். பின்னர் மக்கள் மற்றொரு இடத்தில் இதே போன்று வேளாண்மை செய்யத் தொடங்குவர்.
9

வேதகாலம் இந்தியாவில் எந்த பகுதிகளில் பரவி இருந்தது?

✅ விடை
வட இந்தியா
10

வேதகாலம் எந்த காலப்பகுதியைச் சார்ந்தது?

✅ விடை
இரும்புக் காலம்
11

வேதகால நாகரிகத்தின் இயல்பு என்ன?

✅ விடை
கிராம நாகரிகம்
12

ரிக் வேதகால ஆரியர்கள் எத்தகையவர்கள்?

✅ விடை
நாடோடிகள்
13

ஆரியர்களின் முக்கிய சொத்தாக கருதப்பட்டது எது?

✅ விடை
மேய்ச்சல் சமூகத்தினரான ஆரியர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து ஆகும்.
14

ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் வாழ்விடம் எது?

✅ விடை
பஞ்சாப்
15

ரிக் வேத காலத்தில் பஞ்சாப் எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
சப்த சிந்து (ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி)
16

ஆரியர்கள் சிந்து கங்கைச் சமவெளிப் பகுதியை நோக்கி எப்பொழுது குடியேறினர்?

✅ விடை
கி.மு. 1000
17

ரிக் வேத கால ஆரியர்கள் பயன்படுத்திய வேளாண்மைக் கருவிகள் யாவை?

✅ விடை
இரும்புக் கோடரி, இரும்பிலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றை பரவலாகப் பயன்படுத்தினர்.
18

நான்கு வேதங்கள் யாவை?

✅ விடை
ரிக், யஜூர், சாம, அதர்வன
19

வேதகால இலக்கியங்களை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?

✅ விடை
இரு பிரிவுகள் (சுருதி, ஸ்மிருதி)
20

சுருதிகள் எனப்படுவது யாது?

✅ விடை
நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியது.
21

சுருதிகள் எத்தகையது என நம்பப்பட்டது?

✅ விடை
புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை என கருதப்பட்டவை.
22

சுருதி என்பதன் பொருள் என்ன?

✅ விடை
கேட்டல் அல்லது எழுதப்படாதது. இவை வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன.
23

ஸ்மிருதிகள் என்பது எவை?

✅ விடை
ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவைகளைக் கொண்ட நூல்கள்.
24

ஸ்மிருதிகளுக்கு எடுத்துக்காட்டு?

✅ விடை
இதிகாசங்கள் – இராமாயணம், மகாபாரதம்; புராணங்கள் – சிவ புராணம், விஷ்ணு புராணம்; சூத்திரங்கள் – தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி.
25

ஸ்மிருதிகள் எத்தகையது என நம்பப்பட்டது?

✅ விடை
நிலையானவை அல்ல, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.
26

ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?

✅ விடை
இறுதியான எழுதப்பட்ட பிரதி என்பதாகும்.
27

இந்தியாவின் தேசிய குறிக்கோள் எங்கிருந்து எடுக்கப்பட்டது?

✅ விடை
"சத்யமேவ ஜெயதே" (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
28

வேதகால தொல்பொருள் சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?

✅ விடை
சிந்து மற்றும் கங்கை நதிப் பகுதிகளிலும், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்வு இடங்களிலும் கிடைத்துள்ளன (இரும்புக் கருவிகள், மண்பாண்டங்கள் ஆகியன).
29

வேத காலத்தை எத்தனை வகையாக வகைப்படுத்தலாம்?

✅ விடை
இரண்டு: தொடக்க வேதகாலம், பின் வேத காலம்.
30

தொடக்க வேதகாலம் எந்த காலக்கட்டத்தை சார்ந்தது?

✅ விடை
கி.மு. 1500-1000
31

பின் வேதகாலம் எந்த காலக்கட்டத்தை சார்ந்தது?

✅ விடை
கி.மு. 1000-600
32

ரிக் வேத கால அரசியல் எதனை அடிப்படையாகக் கொண்டது?

✅ விடை
இரத்த உறவுகளை
33

ரிக்டவதகால அரசியலின் அடிப்படை அலகு எது?

✅ விடை
குலம்
34

குலத்தின் தலைவர் யார்?

✅ விடை
குலபதி
35

ரிக் வேத கால சமுதாயம் எவ்வாறு இருந்தது?

✅ விடை
குடும்பம் – கிராமம் – விஸ் (குலம்) – ஜனா (இனக்குழு).
36

ரிக்டவேத காலத்தில் பல குடும்பங்கள் சேர்ந்தது எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
கிராமம்
37

கிராமத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

✅ விடை
கிராமணி
38

பல கிராமங்களைக் கொண்ட தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
விஸ் (குலம்)
39

விஸ் -ன் தலைவர் யார்?

✅ விடை
விஷயபதி
40

ஜனா (இனக்குழு) – வின் தலைவர் யார்?

✅ விடை
ராஜன்
41

ஜனாவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

✅ விடை
ஜனஸ்யகோபா (மக்களின் பாதுகாவலர்)
42

ரிக்டவேத காலத்தில் இருந்த இனக்குழு அரசர்களின் பெயர்கள்?

✅ விடை
பரதர், மத்சயர், புரு (ராஷ்டிரம்)
43

ராஜனின் முக்கிய பொறுப்பு என்ன?

✅ விடை
தனது இனக்குழுவை பாதுகாப்பது
44

ராஜனின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது எந்த குழு?

✅ விடை
விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புகள்.
45

ராஜனின் அதிகாரத்தை கட்டுப்படுத்திய குழுக்களில் பழமையானது எது?

✅ விடை
விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு)
46

சபா என்பது என்ன?

✅ விடை
மூத்தவர்களைக் கொண்ட மன்றம் (முதியோர்கள்).
47

சமிதி என்பது என்ன?

✅ விடை
மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு
48

அரசர் தனக்கு உதவி செய்வதற்காக யாரை பணியில் அமர்த்திக் கொண்டார்?

✅ விடை
புரோகிதர் (தலைமை குரு)
49

அரசருக்கு அரசியல், பொருளாதாரம், ராணுவம் தொடர்பான விஷயங்களில் உதவி செய்தவர் யார்?

✅ விடை
சேனானி (படைத் தளபதி)
50

பிரதேச அரசுகள் எவ்வாறு உருவாகின?

✅ விடை
ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறிய போது ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பிரதேச அரசுகள் உருவாகின.
51

அரசர் தனது நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள என்ன செய்தார்?

✅ விடை
பல சடங்குகளையும் யாகங்களையும் செய்தார்
52

ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் எவ்வாறு உருவாகின?

✅ விடை
பின் வேத காலத்தில் பல ஜனங்கள் அல்லது இனக்குழுக்கள் இணைக்கப்பட்டபோது ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் உருவாகின.
53

பின் வேத காலத்தில் தன் முக்கியத்துவத்தை இழந்தவைகள்?

✅ விடை
சபா, சமிதி ஆகிய அவைகள்.
54

பின் வேத காலத்தில் எந்த மன்றம் இல்லாமல் போனது?

✅ விடை
விதாதா
55

வேத காலத்தில் பாலி என்பது என்ன?

✅ விடை
பாலி என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்து வந்த காணிக்கையாகும். பின் வேத காலத்தில் இது ஒரு வரி ஆக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது.
56

குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலம் எது?

✅ விடை
பின் வேத காலம்
57

அயோத்தி இந்திரப்பிரஸ்தம் மதுரா போன்ற நகரங்கள் எக்காலத்தில் உருவாகின?

✅ விடை
பின் வேத காலம்
58

பாலி என்பது என்ன?

✅ விடை
இது ஒரு வரியாகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை வரியாக செலுத்த வேண்டும்.
59

வேத கால சமூகம் எத்தகைய சமூகம் ஆகும்?

✅ விடை
தந்தை வழி சமூகம்.
60

ஆரியர் அல்லாத மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

✅ விடை
தஸ்யுக்கள், தாசர்கள் (இவர்கள் கருப்புநிற ஆரியர் அல்லாத மக்கள்)
61

ரிக் வேத காலத்தில் வர்ண முறை எப்போது தோன்றியது?

✅ விடை
ரிக் வேத காலத்தின் பிற்பகுதியில்
62

தொடக்க வேத காலத்தில் வர்ணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?

✅ விடை
தோல் நிறத்தின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும்
63

நான்கு வர்ணங்கள் யாவை?

✅ விடை
பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள்
64

க்ஷத்திரியர்கள் என்பவர்கள் யார்?

✅ விடை
போர் செய்பவர்கள் மற்றும் நாட்டை ஆளுபவர்கள்
65

வைசியர்கள் என்பவர்கள் யார்?

✅ விடை
நில உடமையாளர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்கள்
66

சூத்திரர்கள் என்பவர்கள் யார்?

✅ விடை
மேற்கண்ட மூன்று வர்ணத்தாருக்கும் சேவை செய்பவர்கள்
67

வர்ண முறை எக்காலத்தில் கடுமையானதாக மாறியது?

✅ விடை
பின் வேத காலத்தில்
68

பின் வேத காலத்தில் வர்ண முறை எதன் அடிப்படையில் அமைந்தது?

✅ விடை
பிறப்பின் அடிப்படையில் சாதிய முறையாக மாறியது
69

ஆசிரமங்கள் என்பவை யாவை?

✅ விடை
மனிதனின் வாழ்வின் நான்கு நிலைகள் ஆகும்.
70

நான்கு ஆசிரமங்கள் யாவை?

✅ விடை
பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம்
71

மாணவப் பருவம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
பிரம்மச்சரியம்
72

இல்லற வாழ்க்கை எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
கிருகஸ்தம்
73

காடுகளுக்குச் சென்று தவம் செய்தல் எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
வனப்பிரஸ்தம்
74

வீடுபேறு அடைவதற்காக துறவறம் பூணுதல் எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
சந்நியாசம்
75

ரிக் வேத காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது?

✅ விடை
பெண்கள் ஓரளவு சுதந்திரம் பெற்றிருந்தனர், மதிக்கப்பட்டனர்.
76

ரிக் வேத காலத்தில் நிலவிய திருமண முறைகள்?

✅ விடை
குழந்தை திருமணம் மற்றும் உடன்கட்டை ஏறுதல் (சதி) போன்ற வழக்கங்கள் இல்லை.
77

பின் வேத காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது?

✅ விடை
சமூகத்தில் பெண்களின் நிலை தாழ்ந்தது, குடும்பத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது.
78

பின் வேத காலத்தில் தோன்றிய தீய பழக்கங்கள் யாவை?

✅ விடை
குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்கங்கள் சமுதாயத்தில் தோன்றின.
79

பின் வேத காலத்தில் பெண்களுக்குக் கல்வி கற்க உரிமை இருந்ததா?

✅ விடை
இல்லை, பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது.
80

வேத கால பொருளாதாரத்தின் அடிப்படை என்ன?

✅ விடை
கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை
81

வேத காலத்தில் முதன்மைப் பயிராக இருந்தது எது?

✅ விடை
யவா (பார்லி)
82

பின் வேத காலத்தில் பயிரிடப்பட்ட முக்கியப் பயிர்கள் யாவை?

✅ விடை
நெல், கோதுமை
83

வேத கால கைவினைத் தொழில்கள் யாவை?

✅ விடை
மண்பாண்டம் செய்தல், தச்சு வேலை, தோல் வேலை, துணி நெய்தல் மற்றும் உலோக வேலைகள்.
84

வேத காலத்தில் வணிகம் எவ்வாறு நடைபெற்றது?

✅ விடை
பண்டமாற்று முறை மூலம் வணிகம் நடைபெற்றது.
85

வணிகத்தில் பணமாகப் பயன்படுத்தப்பட்டவைகள் எவை?

✅ விடை
நிஷ்கா, சத்மனா (தங்க நாணயங்கள்) மற்றும் கிருஷ்ணலா (வெள்ளி நாணயம்)
86

வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் யாவை?

✅ விடை
தங்கம், இரும்பு, தாமிரம் (அல்லது வெண்கலம்)
87

வேத காலத்தில் தங்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
ஹிரண்யா
88

வேத காலத்தில் இரும்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
சியாம அயஸ்
89

வேத காலத்தில் தாமிரம் அல்லது வெண்கலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

✅ விடை
அயஸ்
90

ரிக் வேத கால ஆரியர்களின் மத வழிபாடு எத்தன்மையைக் கொண்டது?

✅ விடை
இயற்கை வழிபாடாக இருந்தது, பெரும்பாலும் ஆண் கடவுள்களை வழிபட்டனர்.
91

ரிக் வேத கால மக்கள் வழிபட்ட இயற்கை கடவுள்கள் யாவை?

✅ விடை
பிருத்வி (நிலம்), அக்னி (நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன் (இடி)
92

ரிக் வேத காலத்தில் பெண் கடவுள்கள் வழிபடப்பட்டார்களா?

✅ விடை
ஆம், உஷா (அதிகாலைக் கடவுள்), அதிதி (நித்தியக் கடவுள்) ஆகியோர் வழிபடப்பட்டனர்.
93

வேத காலத்தில் மக்கள் எதன் மூலம் இறைவனை வழிபட்டனர்?

✅ விடை
துதிகள் மற்றும் பாடல்கள் பாடுவதன் மூலமும் யாகங்கள் மூலமும் வழிபட்டனர்.
94

பின் வேத காலத்தில் முக்கியத்துவம் இழந்த கடவுள் யார்?

✅ விடை
இந்திரன் மற்றும் வருணன்
95

பின் வேத காலத்தில் முக்கியத்துவம் பெற்ற புதிய கடவுள்கள் யார்?

✅ விடை
பிரஜாபதி (படைப்பவர்), விஷ்ணு (காப்பவர்), ருத்திரன் (அழிப்பவர்)
96

பின் வேத காலத்தில் வழிபாட்டு முறைகள் எவ்வாறு மாறின?

✅ விடை
சடங்குகளும் யாகங்களும் மிகவும் சிக்கலானதாகவும் ஆடம்பரமானதாகவும் மாறின.
97

குருகுலம் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது?

✅ விடை
குரு (ஆசிரியர்), குலம் (குடும்பம்) என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறப்பட்டது.
98

குருகுலக் கல்வி முறை என்பது யாது?

✅ விடை
மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி அவருக்குச் சேவை செய்து கல்வி கற்கும் முறையாகும்.
99

குருகுலத்தில் பாடங்கள் எவ்வாறு கற்பிக்கப்பட்டன?

✅ விடை
வாய்மொழி மூலமாகவே மனப்பாடம் செய்து கற்பிக்கப்பட்டன.
100

குருகுலத்தில் கற்பிக்கப்பட்ட பாடங்கள் யாவை?

✅ விடை
நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கம், ஜோதிடம், இராணுவக் கலை ஆகியன.
101

பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட கல்வி முறை எது?

✅ விடை
குருகுலக் கல்வி முறை
102

குருகுலத்தில் எந்த வர்ணத்தினர் மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்?

✅ விடை
துவிஜர்கள் (இருபிறப்பாளர்கள்) – பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று மேல் வர்ணத்தினர் மட்டுமே.
103

தமிழ்நாட்டில் இரும்புக்காலம் மற்றும் பெருங்கற்காலம் நிலவிய காலப்பகுதி எது?

✅ விடை
சங்க காலத்திற்கு முந்தைய காலப்பகுதி (சுமார் கி.மு. 1000 முதல் கி.மு. 300 வரை)
104

பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

✅ விடை
மெகாலிதிக் ஏஜ் (Megalithic Age) – மெகா என்றால் பெரிய, லித் என்றால் கல் என்று பொருள்.
105

பெருங்கற்காலம் என்பது எதனைக்குறிக்கிறது?

✅ விடை
இறந்தவர்களின் உடல்களைப் புதைத்த இடங்களை பெரிய கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் எனப்பட்டது.
106

ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

✅ விடை
தூத்துக்குடி மாவட்டம்
107

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியப் பொருட்கள் யாவை?

✅ விடை
முதுமக்கள் தாழிகள், கருப்பு-சிவப்பு மண்பாண்டங்கள், இரும்பாலான குத்துவாள்கள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், தங்க ஆபரணங்கள், வெண்கல உருவங்கள்.
108

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த விலங்கு உருவங்கள் யாவை?

✅ விடை
வெண்கலத்தாலான வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளின் உருவங்கள் (புலி, யானை, மான் போன்றவை).
109

மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் கல் ஆபரணங்கள் தயாரிக்கும் திறன்களை மக்கள் பெற்றிருந்ததை உறுதி செய்யும் தொல்லியல் இடம் எது?

✅ விடை
ஆதிச்சநல்லூர்
110

கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

✅ விடை
சிவகங்கை மாவட்டம் (திருப்புவனம் தாலுகா)
111

மத்திய தொல்லியல் துறை எந்த ஊரில் அகழாய்வு செய்து பெரிய நகர நாகரிகத்தின் சான்றுகளைக் கண்டறிந்தது?

✅ விடை
கீழடி
112

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டிட அமைப்புகள் எத்தகையவை?

✅ விடை
செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் முறையான வடிகால் அமைப்புகள்.
113

கீழடியில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் எதில் பொறிக்கப்பட்டுள்ளன?

✅ விடை
மண்பாண்டங்களின் மீது
114

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அணிகலன்கள் யாவை?

✅ விடை
கண்ணாடி மணிகள், செம்மணிகள் (கார்னிலியன்), படிக மணிகள், தங்க ஆபரணங்கள் மற்றும் இரும்புக் கருவிகள்.
115

கீழடியில் ரோம் நாட்டைச் சேர்ந்த தொல்பொருட்கள் கிடைத்ததன் மூலம் அறியப்படும் சான்று என்ன?

✅ விடை
தமிழகத்திற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே சிறந்த வணிகத் தொடர்பு நிலவியதை இது காட்டுகிறது.
116

கீழடி அகழாய்வில் கிடைத்த விளையாட்டுப் பொருட்கள் யாவை?

✅ விடை
சுடுமண்ணால் செய்யப்பட்ட பகடைக்காய்கள், சதுரங்க ஆடடக் காய்கள் மற்றும் வட்டச் சில்லுகள்.
117

பொருந்தல் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

✅ விடை
திண்டுக்கல் மாவட்டம்
118

பொருந்தல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியப் பொருட்கள் யாவை?

✅ விடை
புதைமணல் துகள்கள், இரும்பு வாள்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறித்த மண்பாண்டங்கள், அரிசி நிரப்பப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் கொடுவாள்கள்.
119

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த அரிசி நிரப்பப்பட்ட மண்பாண்டங்கள் எதனை உணர்த்துகின்றன?

✅ விடை
அக்கால மக்களின் முக்கிய உணவாக அரிசி (நெல்) இருந்ததையும், நெல் விளைவிப்பது அவர்களின் முக்கியத் தொழிலாக இருந்ததையும் உணர்த்துகிறது.
120

பையம்பள்ளி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

✅ விடை
வேலூர் மாவட்டம்
121

பையம்பள்ளி அகழாய்வில் கண்டறியப்பட்ட முக்கிய சான்றுகள் யாவை?

✅ விடை
இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் (உலைகள், கசடுகள்) மற்றும் கருப்பு-சிவப்பு மண்பாண்டங்கள்.
122

ரேடியோ கார்பன் முறையின்படி பையம்பள்ளியின் இரும்புக்காலப் பண்பாட்டின் காலம் என்ன?

✅ விடை
கி.மு. 1000 என கணக்கிடப்பட்டுள்ளது.
123

கொடுமணல் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

✅ விடை
ஈரோடு மாவட்டம்
124

பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் என்ற ஊரே தற்போதைய எந்த ஊராகக் கருதப்படுகிறது?

✅ விடை
கொடுமணல்
125

கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியப் பொருட்கள் யாவை?

✅ விடை
தமிழ்-பிராமி எழுத்துக்கள் கொண்ட 300-க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள், இரும்பு உருக்கு ஆலைக்கான சான்றுகள் மற்றும் நூற்புப் கதிர்கள்.
126

கொடுமணலில் கண்டறியப்பட்ட நூற்புப் கதிர்கள் மற்றும் சுழல் அச்சுக்கள் எதனை உணர்த்துகின்றன?

✅ விடை
அக்கால மக்கள் துணி நெய்யும் நெசவுத் தொழிலை அறிந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றன.
127

கொடுமணல் அகழாய்வில் புதைக்குழிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் எது?

✅ விடை
பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் மற்றும் மென்ஹிர்கள் (நினைவுக்கற்கள்).
128

கற்திட்டைகள் (Dolmens) என்றால் என்ன?

✅ விடை
இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் செங்குத்தாக இரு கற்களை நட்டு, அதன் மேல் ஒரு பெரிய கற்பலகையை மூடி வைக்கப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னம்.
129

தமிழ்நாட்டில் கற்திட்டைகள் காணப்படும் இடங்கள் யாவை?

✅ விடை
வீரராகவபுரம் (காஞ்சிபுரம் மாவட்டம்), கும்மாளமருதுபட்டி (திண்டுக்கல் மாவட்டம்), நரசிங்கம்பட்டி (மதுரை மாவட்டம்).
130

நினைவுக்கற்கள் அல்லது மென்ஹிர் (Menhir) என்றால் என்ன?

✅ விடை
இறந்தவர்களின் நினைவாக செங்குத்தாக நடப்படும் ஒற்றைக் கற்கள் ஆகும். பிரிட்டானிய மொழியில் மென் என்றால் கல், ஹிர் என்றால் நீளமான என்று பொருள்.
131

தமிழ்நாட்டில் நினைவுக்கற்கள் (மென்ஹிர்) எங்கு காணப்படுகின்றன?

✅ விடை
திருப்பூர் மாவட்டம் சிங்கரிபாளையம், தேனி மாவட்டம் வெம்பூர், மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, ஈரோடு மாவட்டம் கொடுமணல்.
132

நடுகற்கள் (Hero Stones) என்றால் என்ன?

✅ விடை
தங்கள் கிராமத்தையோ அல்லது கால்நடைகளையோ எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் போராட்டத்தில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவாக நடப்படும் கற்கள்.
133

தமிழ்நாட்டில் நடுகற்கள் காணப்படும் முக்கிய இடங்கள் யாவை?

✅ விடை
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகில் உள்ள மானூர், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளங்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் புலிமான்கோம்பை.
134

கி.மு. ஆறாம் நூற்றாண்டு அறிவுமலர்ச்சிக் காலம் என அழைக்கப்படக் காரணம் என்ன?

✅ விடை
இக்காலகட்டத்தில் பழைய மதக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் புதிய சிந்தனைகளும் சமணம், பௌத்தம் போன்ற புதிய மதங்களும் தோன்றின.
135

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் நிலவிய சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு முக்கியக் காரணம் எது?

✅ விடை
இரும்பின் பயன்பாடு அதிகரித்ததால் விவசாயம் பெருகி நகரங்கள் உருவானமை.
136

தீர்த்தங்கரர்கள் என்பவர்கள் யார்?

✅ விடை
சமண மதக் கொள்கைகளைப் போதித்த குருமார்கள் அல்லது வழிகாட்டிகள் ஆவர்.
137

சமண மதத்தில் மொத்தம் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

✅ விடை
24 தீர்த்தங்கரர்கள்
138

சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

✅ விடை
ரிஷபதேவர்
139

சமண மதத்தின் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் யார்?

✅ விடை
மகாவீரர் (வர்த்தமானர்)
140

மகாவீரர் எப்போது, எங்கு பிறந்தார்?

✅ விடை
கி.மு. 540 இல் பீகாரில் உள்ள வைசாலிக்கு அருகிலுள்ள குண்டகிராமத்தில் பிறந்தார்.
141

மகாவீரரின் பெற்றோர் யார்?

✅ விடை
சித்தார்த்தர் (தந்தை), திரிசலா (தாய்)
142

மகாவீரர் எந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவர்?

✅ விடை
ஞானத்ரிகா என்ற சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்.
143

வர்த்தமானர் என்ற சொல்லின் பொருள் என்ன?

✅ விடை
செழிப்பு என்று பொருள்.
144

மகாவீரர் தனது எத்தனையாவது வயதில் அரண்மனை வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்?

✅ விடை
முப்பதாவது வயதில்
145

மகாவீரர் எத்தனை ஆண்டுகள் கடுமையான தவம் புரிந்து கைவல்ய (முழு அறிவு) நிலையை அடைந்தார்?

✅ விடை
12 ஆண்டுகள்
146

மகாவீரர் என்ற சொல்லின் பொருள் என்ன?

✅ விடை
மாபெரும் வீரன் என்று பொருள். புலன்களை வென்றதால் இவர் ஜினன் என்றும் அழைக்கப்பட்டார்.
147

சமணம் (Jainism) என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது?

✅ விடை
ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் தன்னையும் தன் புலன்களையும் வெல்வது என்பதாகும்.
148

மகாவீரர் எங்கு, எப்போது இயற்கை எய்தினார் (முக்தி அடைந்தார்)?

✅ விடை
கி.மு. 468 இல் பீகாரில் உள்ள பாவாபுரி என்ற இடத்தில் தனது 72-வது வயதில் முக்தி அடைந்தார்.

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்

🗺️
மற்ற அலகுகளைப் பார்க்க
Term 2 — அனைத்து அலகுகளும்
📚
புத்தக அடைப்புக்குத் திரும்ப
மற்ற Terms-ஐப் பார்க்க
📋
TNPSC குரூப் 4 PYQ பயிற்சி
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
📰
தினசரி நடப்பு நிகழ்வுகள்
தினமும் புதுப்பிக்கப்படும் MCQ